Header Ads

Header ADS

குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டாகிறது; நடிகர் சிம்பு வெளிப்படை


சென்னை, ஜூன் 23-

‛‛நான் மதுப்பானம் குடிப்பதை நிறுத்தி ஒரு ஆண்டாகிறது’’ என நடிகர் சிம்பு கூறினார்.

மாநாடு 

நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரயதர்சன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் டப்பிங் பணிகள் மட்டும் இன்னும் பாக்கி உள்ளது.

கலந்துரையாடல்

இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக்காக ‛‛மெகரிசைலா’’ பாடல் நேற்று முன்தினம் வெளியாகி வைரலானது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, அவரது சகோதரி பாவதாரணி ஆகியோர் பாடியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மாநாடு படத்தின் புரோமோஷனாக சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படத்தில் நடித்தவர்கள் ‛டுவிட்டர் ஸ்பேஸில்’ கலந்துரையாடினர்.

குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன்

அப்போது ‛‛பிரேம்ஜி பற்றி கூறுங்களேன்’’ என நடிகர் சிம்புவிடம், எஸ்.ஜே.சூர்யா கேட்டார். அதற்கு பிரேம்ஜி குறித்து சிம்பு பதிலளித்தார். மேலும் மதுப்பான பழக்கத்தை தான் கைவிட்டது பற்றி சிம்பு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‛‛நான் குடிப்பழக்கத்தை விட்டு ஒரு ஆண்டு ஆகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் தான் குடிப்பழக்கத்தை கைவிட்டேன். பிரேம்ஜியுடன் சேர்ந்து படத்தில் நடித்தும் மதுபானம் குடிக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். மதுபானத்தை கைவிட்ட நாள் முதல் தனிப்பட்ட முறையில் நான் நன்றாக உணர்கிறேன்’’ என ஜாலியாக பதிலளித்தார்.

நடிகர் பிரேம்ஜி மதுப்பானம் குடிப்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதனால் அவருடன் சேர்ந்து நடித்தும், மதுபானம் குடிக்காமல் இருப்பதை சிம்பு பெருமையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.