Header Ads

Header ADS

இந்தியா-இலங்கை தொடருக்கான போட்டி நேரம் மாற்றம்


கொழும்பு, ஜூலை 15-

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் மற்றும் டுவெண்டி20 தொடருக்கான தேதி மாற்றப்பட்ட நிலையில் தற்போது போட்டி தொடங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3 ஒருநாள், 3 டுவெண்டி20 போட்டிகள்

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தவான் தலைமையில் இளம் இந்திய வீரர்கள் 3 ஒருநாள் போட்டி, 3 டுவெண்டி20 போட்டிகளில் இலங்கையை எதிர்கொள்கின்றனர்.
ஒருநாள் போட்டிகள் ஜூலை 18, 20, 23ந் தேதிகளிலும், டுவெண்டி20 போட்டிகள் ஜூலை 25, 27, 29 தேதிகளிலும் நடக்க உள்ளன.

நேரம் மாற்றம்

இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய இலங்கை பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், டேட்டா அனலைசர்  நிரோசன் ஆகியோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்து. இதன் தொடர்ச்சியாக போட்டி தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மதியம் 1.30 மணிக்கு துவங்குவதாக இருந்த ஒருநாள் போட்டிகள் மதியம் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கு தொடங்குவதாக கூறப்பட்ட டுவெண்டி20 போட்டிகள்  இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

No comments

Powered by Blogger.